"நீட் தேர்வு 2019" எழுத நீங்கள் தயாராக உள்ளீர்களா?

"நீட் தேர்வு 2019" எழுத நீங்கள் தயாராக உள்ளீர்களா?

இந்தியாவில் உள்ள போட்டித் தேர்வுகளுள், கடினமான தேர்வு பட்டியலில் ஒன்றான நீட் தேர்வில் வெற்றி பெற உங்களது திட்ட முறையை அட்டவணை படுத்திவிட்டீர்களா?

நீட் தேர்வு நடைபெறும் நேரம் 2 pm- 5 pm
மதிய நேரத்தில் தேர்வு எழுதும் பழக்கம் உண்டா?

நீங்கள் படித்த பாடங்களை ரிவிஷன் செய்ய மட்டும் தானே நீட் பயிற்சி மையங்களில் கிராஷ் கோர்ஸில் இணைந்து படிக்கிறீர்கள்?

மதியம் 2 மணிக்கு தேர்வு எழுத வேண்டுமானால்,"மதிய உணவை எப்போது சாப்பிடவேண்டும்.என்ன சாப்பிட வேண்டும்." என்பதை பற்றி சிந்தித்ததுண்டா?

மாணவர்களே!உங்களது +2 பொதுத் தேர்வு முறையும் நீட் தேர்வு முறையும் ஒன்றல்ல என்பதை அறிவீர்கள். நீட் தேர்வில்  நீங்கள் பத்தியாகவோ வாக்கியமாகவோ பதில்கள் எழுத வேண்டாம். நான்கினுள் மிகப் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலான கேள்விகளுக்கு கொடுத்திருக்கும் நான்கு பதிலும் சரியான விடை போலத் தோன்றும். ஆனால் அதில் மிகவும் பொருத்தமான பதிலே சரியான விடையாகும். இவ்வித வினாக்களை கையாள உங்களது திட்டம் யாது?
 பதட்டமின்றி நீட் தேர்வு எழுத பல மாதிரித் தேர்வுகளை எழுதியுள்ளீர்களா?

40 நாட்களில் என்சிஇஆர்டி(NCERT)யின் படி 98 பாடங்களை சரியான முறையில் ரிவிஷன் செய்ய அட்டவணையை அமைத்து அதனை பின்பற்றுகிறீர்களா?

சென்ற ஆண்டு சிபிஎஸ்சி (CBSE) நடத்திவந்த நீட் தேர்வை இம்முறை என்டிஏ (NTA) நடத்துகின்றது.  மேலும் இம்முறை நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். பெரும்பாலான மாணவர்கள் தூக்க நிலையையும் ஒருவித மந்தமான நிலையையும் உணரும் நேரம் இது. இவ்வுணர்வை கட்டுப்படுத்தி நீட் தேர்வு எழுத வழிகள் என்ன என்பதை சிந்தித்ததுண்டா?

மதிய நேரத்தில் தூக்கம் வருவதற்கு முக்கிய காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் மதிய உணவு. நீட் தேர்வு எழுதும் பொழுது எவ்வித மந்தமான உணர்வும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மாணவர்கள் உண்ணும் உணவில் சற்று கவனம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.
கவனமாக சிந்தித்து உங்களுக்கான ஓர் உணவுத் திட்டத்தை அமைத்துவிட்டீர்களா?

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 
ஒரு செயலை முடிப்பதற்கு கருவிகளுடன் ஏற்று காலத்தையும் அறிந்து செயல்பட வேண்டும். எனவே, நீட் தேர்வை சிறப்பாக எழுத வேண்டுமானால் மதிய உணவை எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
எப்பொழுது சாப்பிட்டால் சோம்பல் ஏற்படாது என்பதை அறிவீர்களா?

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கேற்ப உங்களிடம் இருக்கும் 40 நாட்களில் காலத்தை வீணாக்காமல் சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்.


Krishna Institute
Above ICICI Bank 4th Floor
Shri Vari Complex, 36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy 
+91 8680856666
+91 8608546666






Comments